இவர் 2005-ல் 100 மணி நேரம் தொடர்ந்து மிருதங்கம் வாசித்தது இதுவரை உலக சாதனையாக உள்ளது. கோவையை அடுத்த நேரு ஏராநாட்டிகல் கல்லூரியில் இந்த சாதனை முயற்சியை ஆக.1-ம் தேதி காலை 10 மணிக்கு ராமகிருஷ்ணன் தொடங்கினார். செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு 101 மணி நேரங்களைக் கடந்து தனது முந்தைய சாதனையை முறியடித்தார். கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள குழல்மன்னம் கிராமத்தில் இசைக் குடும்பத்தில் பிறந்தவர் ராமகிருஷ்ணன். இவரது தந்தை கோபாலகிருஷ்ண ஐயரிடம் இசையை முறைப்படி கற்றுக் கொண்டார். இவரது 10-வயதில் செம்பை கிராமத்தில் மேடை கச்சேரியில் பங்கேற்றார். கடந்த 27 ஆண்டுகளாக ஏறத்தாழ 5 ஆயிரம் மேடைக் கச்சேரிகளில் இவர் பங்கேற்றுள்ளார். தனது சாதனையை தானே முறியடித்ததோடு, தொடர்ந்து 6-வது நாளாக மிருதங்கம் வாசித்துக் கொண்டிருக்கிறார். 125 மணி நேரம் தொடர்ந்து மிருதங்கம் வாசிக்கத் திட்டமிட்டுள்ளார். சாதனையாளர் ராமகிருஷ்ணனுக்கு, பல்வேறு தரப்பினரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
தனக்கு சென்னையில் வாடகைக்கு வீடு பிடிப்பதற்காக ஒரு மாணவியை, தனது மனைவியாக நடிக்க வைத்து வீடு பிடித்ததாக சென்னையில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி அமலன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று அமலன், உமா ரமணன் ஆகிய இரு விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் அமலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அமலன் அளித்துள்ள வாக்குமூலம்: நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன். 10ம் வகுப்பு வரை படித்துள்ளேன். விடுதலை புலிகள் நடத்தும் சுதந்திர போராட்டத்தில் நானும் உணர்வு பூர்வமாக பணியாற்றி வருகிறேன். கடல் புலிகள் பிரிவில் படை வீரனாக உள்ளேன். இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்து வருவதால் எங்களுக்கு ஏராளமான பொருட்கள் தேவைப்படுகின்றன. வெளிநாட்டில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் பொருட்களை கொண்டு செல்கிறோம். இதற்காக விடுதலை புலிகளின் பல்வேறு பிரிவுகளில் தனித்தனிக் குழுக்கள் செயல்படுகின்றன. நாங்கள் போர் படை பிரிவில் போருக்குத் தேவையான ஆயுத தளவாடங்கள், வெடிபொருட்கள் ஆகியவற்றை கடத்தும் பணிக்காக தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளோம். எங்களது பணியை முழுமையாக எங்களுக்கு தெரிவிக்க மாட்டார்கள். கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்துக்கு செல்லும்படியும் சென்னை கே.கே.நகரில் உள்ள அகதி முகாமில் தங்கும்படியும் உத்தரவு வந்தது. அதன்படி கடந்த ஏப்ரல் 17ம் தேதி கள்ளத் தோணியில் ராமேஸ்வரத்தில் என்னை கொண்டு வந்துவிட்டனர். அங்கிருந்து நான் சென்னை அகதி முகாமில் தங்கியிருந்தேன். கடந்த 17ம் தேதி உமாரமணன் சென்னை வந்து என்னை சந்தித்தார். எங்களுக்கு சில பணிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தனியாக வீடு எடுத்துக் கொள்ளும்படியும் எங்களுக்கு உத்தரவாகி இருந்தது. அதற்கு தேவையான பணம் ஹவாலா மூலம் வரும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆப்பிரிக்க நாடான மௌரிடானியா வில் ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்டு அந்நாட்டு அதிபர் சிறை பிடிக்கப்பட்டுள்ளார் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மௌரி டானியாவில் அரசியல் ரீதியாக கொந்தளிப்பான நிலை நிலவி வந்தது. இதற்கு ராணுவமே காரணம் என்று அந்நாட்டு அதிபர் அப்தல்லாஹி மூத்த ராணுவ அதிகாரிகளை கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து அந்நாட்டு ராணுவம் அதிபருக்கு எதிராக ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டது. நேற்று ராணுவ வாகனங்கள் தலைநகரை முற்றுகையிட்டு அதிபர் மாளிகையை சுற்றி வளைத்தது. பின்னர் அதிபர் ஆட்சிப்பொறுப்பிலிருந்து அகற்றப் பட்டார். பிரதமர் மற்றும் இதர அமைச்சர்களும் ராணுவத்தால் சிறை பிடிக்கப் பட்டுள்ளனர். இந்த ஆட்சி கவிழ்ப்பிற்கு அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சமீப காலமாக இணைய தளங்களில் உலாவி வருகிறது நம்பர் ஒன் நடிகையான நயனதாராவின் பெயரிலான ஆபாச வீடியோ. இதையடுத்து மனித உரிமை ஆணையத்துக்குச் செல்ல முடிவெடுத்துள்ளார் நயனதாரா. நயனதாராவும் சிம்புவுடன் மிக மிக ‘நெருக்கமாக’ இருந்த படங்கள் இரு ஆண்டுகளுக்கு முன் இணைய தளங்களை ஆக்கிரமித்தன. சிம்புவுடன் காதல் முறிந்ததாக நயன் அறிவித்தவுடன் இப்படங்கள் வெளியாகின. அவற்றைப் பார்த்து கோபமடைந்த நயன், போலீசில் புகார் செய்தார். இந் நிலையில் மலையாள இயக்குநர் ஒருவருடன் நயனதாரா ஆபாச நிலையில் இருப்பதைப் போன்ற வீடியோக்கள் இணைய தளங்களிலும் எம்எம்எஸ்களாகவும் வலம் வரத் தொடங்கியியுள்ளன. இது கிராபிக்ஸ் மூலமாக தனது பெயரைக் கெடுக்க தனது தொழில் எதிரிகள் செய்துள்ள சதி என்று கூறி மனித உரிமை ஆணையத்திடம் போக முடிவு செய்துள்ளார் நயனதாரா. ஆனால், சிம்புவுடன் இவர் நெருக்கமாக இருந்த படங்கள் வெளி வந்தபோது போலீசுக்குப் போனவர் இப்போது போலீசுக்குப் போகாமல் ஏன் மனித உரிமை கமிஷனை நாட திட்டமிடுகிறார் என்று தெரியவில்லை. இம்மாதிரி விஷயங்களில் மனித உரிமை கமிஷன் எந்த அளவுக்கு தலையிட முடியும் என்றும் தெரியவில்லை.
தர்ம நடவடிக்கைகளுக்காக நிதி சேகரித்தல் என்ற போர்வையில் புலிகளுக்கு நிதி சேகரித்து வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நடவடிக்கைகள் தமது நாட்டிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு புலிகளுடன் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் அவ்வமைப்பை நியூசிலாந்திலும் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து மக்களின் வரி மூலமான பணம் பயங்கரவாத அமைப்புக்களுக்கு செல்வதை அனுமதிக்க முடியாதென்றும் தர்ம காரியங்களுக்காக நியூசிலாந்து அரசாங்கம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு ஒரு இலட்சத்து இருபதாயிரம் டொலர்களை வழங்கியுள்ளது என்றும் அந்த நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் முற்றே மெக்கரி தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆயுதங்கள் மற்றும் யுத்த உபகரணங்கள் போன்றவற்றைக் கொள்வனவு செய்வதற்காக நிதி சேகரிப்பதாகக் குற்றஞ்சாட்டி அமெரிக்கா கடந்த 2007ஆம் ஆண்டு இக்கழகத்தின் நிதிகளை முடக்கியிருந்தது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சுனாமி அனர்த்த நிதியத்துக்காக சேகரித்த நிதியும் புலிகளுக்காக வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சென்னை பெரியமேடு பகுதியில் காவல் நிலையத்தில் தங்களைப் பற்றிய விவரங்களைத்த தெரிவிக்காமல், லாட்ஜில் தங்கியிருந்த இரண்டு இலங்கைத் தமிழர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் ஊடுறுவலைத் தடுக்க போலீஸார் கடுமையான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சமீபத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான தம்பி அண்ணன் கைதானார். நேற்று அமலன் உள்ளிட்ட இரண்டு விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சென்னையில் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள், அகதிகள் முகாம்களில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு பெரியமேடு இன்ஸ்பெக்டர் பாண்டியன், விடுதிகளில் அதிரடி சோதனைகளில் மேற்கொண்டார். அப்போது ஒரு விடுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கியிருந்த சதீஸ்வரன் (வயது 28), ஜியாவுதீன் அகமது (வயது 40) என்ற இரண்டு இலங்கை தமிழர்கள் பிடிபட்டனர். இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் தாங்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு அருகே உள்ள காவல் நிலையத்தில் தங்களை பற்றிய தகவல்களை தெரிவித்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை இவர்கள் கடைபிடிக்கவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது. சதீஸ்வரன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஜியாவுதீன் அகமது கொழும்பில் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சியை நடத்தி வருபவர் என்பதும் விசாரணையில் தெரிந்தது. சதீஸ்வரனை ரஷ்யாவுக்கு அனுப்புவதற்காக இருவரும் கடந்த ஜூன் மாதம் சென்னைக்கு வந்து பல்வேறு விடுதிகளில் தங்கியிருந்துள்ளனர். அந்த வரிசையில் கடைசியாக பெரியமேட்டில் உள்ள விடுதியில் தங்கியிருந்த போது போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்களை பற்றி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீபா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கை இந்தியாவின் 37வது மாநிலமாகும்-விமல் வீரவன்ச எம்.பி
செய்திகள் No Comments »இலங்கைக்கு இந்தியாவிற்குமிடையில் பரந்தளவிலான பொருளாதார ஒத்துழைப்பு (சீபா) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கை இந்தியாவின் 37வது மாநிலமாகும் என்பதால் இவ்வொப்பந்தத்தை கைச்சாத்திட வேண்டாம். இதன்மூலம் நாட்டிற்கு எவ்விதமான பயனுமில்லை. என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். புலிகளுக்கு எதிராக படையினரால் முன்னெடுக்கப்படுகிற படைநடவடிக்கைகளுக்கு இந்தியா வெளிப்படையாக ஆதரவளிக்காவிடினும் மௌனமாக இருந்து ஆதரவளிப்பதாக நாம் எண்ணுகிறோம். அதற்காக இறைமையை பறிகொடுக்க முடியாது. ஏற்கனவே இந்தியாவுடன் செய்து கொண்டு ஒப்பந்தங்களால் எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை. முழுப்பயனையும் இந்தியாவே அனுபவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை விட சீபா ஒப்பந்தம் அபாயகரமானது. என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாளை கொழும்பில் தொடங்குகிறது. இதை இந்தியா வென்று தொடரைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்தியா - இலங்கை இடையே 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர் நடந்து வருகிறது. கொழும்புடெஸ்ட் போட்டியில் இலங்கையும், காலி போட்டியில்இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் 3வது டெஸ்ட் போட்டி நாளை கொழும்பில் தொடங்குகிறது. காலி டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி பெரும் வெற்றியைப் பெற்றது. அதேபோன்ற இன்னொரு ஆட்டத்ைத கொழும்பு போட்டியிலும் இந்தியா வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். அதிக ரன்களைக் குவித்து இலங்கை தொடரில் உலக சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் இதுவரை ஏமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். இதேபோல மூத்த வீரர்களான கங்குலி, டிராவிடும் சொல்லிக் கொள்ளும்படி ஆடவில்லை. நெருக்கடியான நேரத்தில் இவர்கள் இந்தியாவுக்கு கை கொடுக்கவில்லை. அதேசமயம், வீரேந்திர ஷேவாக் முதல் டெஸ்ட்டிலிருந்தே அதிரடியாக ஆடி வருகிறார். ஹர்பஜன் சிங்கும், காலி டெஸ்ட்டில் தனது கலக்கலான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். ஆனால் இலங்கை தரப்பில் முரளிதரனும், அஜந்தா மெண்டிஸும் கலக்கி வருகின்றனர். பேட்டிங்கிலும் அவர்கள் சிறப்பாக உள்ளனர். இந்தியாவின் பந்து வீச்சு இன்னும் பலமாகவில்லை. இஷாந்த் சர்மா காலி டெஸ்ட்டில் சற்றே பயமுறுத்தினார். ஜாகிர்கான் இன்னும் விஸ்வரூபம் எடுக்கவில்லை. இப்படி தட்டுமுட்டு தடுமாற்றத்துடன் இந்தியா தொடரை சமண் செய்து வைத்துள்ளது. கொழும்பு டெஸ்ட் போட்டியில் முழு வீச்சில் முழு பலத்தையும் இந்தியா வெளிப்படுத்துமானால் தொடரை வெல்வது உறுதி.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதை அணைக்க தீயணைப்பு வீரர்கள் விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் தண்ணீரை கொண்டு சென்று ஊற்றினார்கள். இந்த பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று காட்டு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டரில் 2 பைலட்டுகள் மற்றும் 11 தீயணைப்பு படையினர் இருந்தனர். அவர்கள் 9 பேர் உயிர் இழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் காட்டுத்தீ எரிந்து கொண்டிருந்தது. அதற்குள் காயம் அடைந்தவர்கள் சிக்கி கொண்டனர். இதனால் அவர்களுக்கு தீக்காயமும் ஏற்பட்டது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 2004-ம் ஆண்டுக்கான போட்டி கிரீஸ் தலைநகர் ஏதன்சில் நடந்தது. 2008-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி சீனா தலைநகர் பெய்ஜிங்கில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி நாளை (8-ந்தேதி) முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது. ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா பெய்ஜிங் நகரில் நாளை கோலாகலமாக நடக்கிறது. 2008 ஆகஸ்ட் 8-ந்தேதி (08.08.08) சீன நேரப்படி இரவு 8.08 மணிக்கு (இந்திய நேரம் மாலை 5.38) தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. 200-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கின்றன. அனைத்து நாட்டு வீரர், வீராங்கனைகள் தொடக்க விழாவில் அணிவகுத்து வருவார்கள். கண்கவர் கலை நிகழ்ச்சி, வானவேடிக்கைகள் நடைபெறும். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பிரான்சு அதிபர் நிகோலஸ், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட் உள்பட 101 நாட்டு தலைவர்கள் தொடக்க விழாவில் பங்கேற்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். கனடா, ஜெர்மனி தலைவர்கள் இதில் பங்கேற்கவில்லை. திபெத்தியர்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 17 நாட்கள் நடைபெறும் இந்தப்போட்டியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். தொடக்க விழா நடைபெறும் பெய்ஜிங் தேசிய ஸ்டேடியம். 91 ஆயிரம் பேர் அமரலாம். தடகளம், கால்பந்து போட்டிகள் மற்றும் நிறைவிழா இங்குதான் நடக்கிறது. இந்த ஸ்டேடியம் பறவை கூடு என்று அழைக்கப்படுகிறது.
ஆயுள் தண்டனையை 20ஆண்டு சிறைத் தண்டனையாக மாற்றுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர் யூ.எல்.எம்.டி சில்வா தலைமையில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட 147 பேர் தொடர்பாகக் குழுவினர் ஆயு;வு நடத்தியுள்ளனர் இந்த புதிய நடைமுறையின் கீழ் ஆயள்தண்டனை பெற்றுள்ள பலர் விடுதலை செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆயுள் தண்டனை 20 வருடகால சிறைத் தண்டனையாக்கப்பட்ட போதிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் ஆயுள்தண்டனைக் காலம் நீடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சியில் இருக்கும் எனது பெற்றொர்களை புலிகள் மிரட்டியதால் தான் நான் புலிகளுக்காக பொருட்களை கடத்த முற்பட்டேன்; விடுதலைப்புலிகளின் ஏஜெண்டு சென்னையில் கைது: பரபரப்பு வாக்குமூலம்
செய்திகள் 1 Comment »சென்னையில் விடுதலைப்புலிகளின் ஏஜெண்டு கைது செய்யப்பட்டார். இலங்கைக்கு கடத்த முயன்ற தொலைதொடர்பு கருவிகளை போலீசார் அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே உச்சகட்ட போர் நடந்து வருகிறது. இதனால் விடுதலைப்புலிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை தமிழகத்தில் இருந்து கடத்தி செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பொருட்களை கடத்தி செல்லாதவாறு தடுக்கும் பணியில் கியூ பிரிவு போலீசார் தீவிரமாக உள்ளனர். தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் கடத்தல் ஏஜெண்டுகளை கியூபிரிவு போலீசார் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். தமிழகத்தில் இருந்து டீசல் மற்றும் அலுமினிய கட்டிகள் போன்ற பொருட்களை விடுதலைப்புலிகள் அதிகமாக கடத்தி செல்கிறார்கள். இவ்வாறு பொருட்களை கடத்திச் செல்வதற்கு விடுதலைப்புலிகளே தமிழகத்தில் நேரடியாக சில நேரம் வருகின்றனர். விடுதலைப்புலிகளின் கடத்தல் ஏஜெண்டுகளும் தமிழகத்தில் ஏராளமான பேர் உள்ளனர். தமிழகத்தில் ஊடுருவும் விடுதலைப்புலிகளையும் இங்குள்ள கடத்தல் ஏஜெண்டுகளையும் கிï பிரிவு போலீசார் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். கடந்த மாதம் 29-ந் தேதியன்று விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர் தம்பிஅண்ணா என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் இருந்து பொருட்களை இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக புதிய விïகம் வகுக்க அவர் சென்னை வந்த போது பிடிபட்டதாக போலீசார் தெரிவித்தனர். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் நூற்றுக்கணக்கான கடத்தல் ஏஜெண்டுகளை வேட்டையாடி பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை ஆகிய பகுதிகளில் விடுதலைப்புலிகளின் கடத்தல் ஏஜெண்டுகள் தங்கி இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அந்த பகுதிகளை கண்காணிக்கும்படி டி.பி.ஜி. கே.பி.ஜெயின் உத்தரவிட்டார். ஐ.ஜி. ஜாபர்சேட், டி.ஐ.ஜி. சங்கர்ஜிவால், சூப்பிரண்டு அசோக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் கூடுதல் சூப்பிரண்டு சுப்பிரமணியம், துணை சூப்பிரண்டு சந்திரசேகரன் ஆகியோர் தலைமையிலான கியூபிரிவு போலீசார் மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை பகுதிகளை மாறு வேடத்தில் கண்காணித்தனர். மடிப்பாக்கத்தில் உள்ள எலக்ட்ரானிக் கடை ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு தேவையான தொலை தொடர்பு தகவல் கருவிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கண்காணிப்பில் கண்டறியப்பட்டது. உடனே அந்த கடையில் கிï பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். சோதனையில் செல்போன் மூலம் மோட்டார்களை இயக்கும் ஸடார்ட்டர் கருவியும், 50 கிலோ மீட்டர் தூரம் பேசக்கூடிய சக்திவாய்ந்த டெலிபோன் இணைப்பு கருவிகள் 10 (பவர் ஸ்டேஷன், நானோ ஸ்டேஷன்), இன்டர்நெட் போன் அடாப்டர் 9 போன்ற கருவிகள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பொருட்கள் பிரான்சில் இருந்து கொண்டு வரப்பட்டு இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக எலக்ட்ரானிக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களை வாங்கி இலங்கைக்கு கடத்தி செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளின் ஏஜெண்டு செல்வம் என்ற செல்வக்குமாரையும் (வயது 31), கியூபிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்தது. அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது அவரிடம் இலங்கையில் இருந்து விடுதலைப்புலிகளின் உளவு பிரிவு தலைவர் ஜீவன் என்ற இனியன் அடிக்கடி பேசி இருப்பது தெரிய வந்தது. போலீஸ் விசாரணையில் செல்வக்குமார் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:-

ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழாவில் பங்கேற்பதற்காக சீனா செல்லவிருந்த பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். பாகிஸ்தான் அரசு தனது பதவியை பறித்து விடும் அச்சம் காரணமாக முஷாரப் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை மறுநாள் பெய்ஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கு கின்றன. இதில் பங்கேற்க முஷாரப் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி கூட்டணி அரசு முஷாரப்பை அதிபர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான முடிவு நேற்று நடை பெற்ற கூட்டணிக்கட்சிகளின் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. தாம் வெளிநாடு பயணம் மேற் கொள்ளும் சமயத்தில் பாகிஸ்தான் அரசு தனது பதவியை பறித்து விடுமோ என்ற அச்சம் காரணமாக முஷாரப் தனது சீன பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரை மாவட்டதில் உள்ள அகதி முகாமில் வைத்து கடந்த திங்கட் கிழமை(2008-08-04) கைது செய்யப்பட்ட கிருஷ்ணநவனீதன் ,புலிகளின் கடல் படை தளபதியான சூசை என்று அழைக்கப்படும் சிவனேசனின் சகோதரரின் மகன் என தமிழக பொலிசார் தெரிவித்தாக என்.டி.ரி.வி (NDTV) தனது பிரதான செய்தியில் தெரிவித்துள்ளது. கிருஷ்ணநவனீதனின் சகோதரர் ஆன விஜயனீதன் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி கீழக்கரைக்கு அண்மித்து உள்ள உப்பூர் எனும் இடத்தில் இருந்து புலிகளுக்கு பொருட்களை கடத்த முட்பட்ட பொழுது கைது செய்யப்பட்டு இருந்தார். இவர் கொடுத்த தகவலை அடுத்தே இவரின் சகோதரர் ஆன கிருஷ்ணநவனீதன் திங்கட் கிழமை கியூ பிரிவு புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டார். உப்பூரில் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி விஜயனீதன் கைது செய்யப்படும் பொழுது அவரிடம் இருந்து சுவிஸ் நாட்டு தயாரிப்பான தொலை தொடர்பு கருவிகள், 10 செய்மதி வழிகாட்டிகள் , குண்டு துளைக்காத கவச அங்கிகள், மின் வேகத்தினை அளவு செய்யும் கருவிகள் என்பன கைப்பற்றப்பட்டதாக தமிழக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இவருடன் ரக்ஷநந்தன், சிவராமன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் கடந்த காலங்களில் தமிழகத்தில் இருந்து புலிகளுக்கு தேவையான பொருட்களை அனுப்பி வந்துள்ளார்கள் என விசாரனையின் போது தெரிவித்துள்ளது. தமிழக பொலிசார் இவர்கள் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், அண்மையில் கைது செய்யப்பட்ட 5 புலி உறுப்பினர்களும் சகல ஆயுதங்களும் இயக்க கூடிய வைகையில் பயிற்ச்சி பேற்றதுடன் பாக்கு நீரினை மற்றும் இந்திய - இலங்கை கடற்கரைகள் குறித்து மிகவும் பரிச்சயமானவர்கள் என தெரிவித்து உள்ளனர்.

கிர்கிஸ்தானில் குழந்தைகளுக்கு ஊசி மூலம் எச்ஐவி கிருமியை செலுத்திய 9 டாக்டர்கள் கைது
செய்திகள் No Comments »கிர்கிஸ்தானில் பல்வேறு குழந்தைகளுக்கு ஊசி மூலம் எச்ஐவி கிருமியை செலுத்திய 9 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் டாலர் அபராதமும் விதித்து நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இந்த 9 டாக்டர்களும் 41 குழந்தைகள் மற்றும் 4 பெண்களுக்கு ஊசி மூலம் எச்ஐவி கிருமியை செலுத்தியதாக கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. இவர்களில் 4 டாக்டர்கள் கடந்த ஜூலை மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கிர்கிஸ்தானையொட்டியுள்ள கஜகஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டு இதே போல் 100 குழந்தைகளுக்கு எச்ஐவி கிருமியை செலுத்தியதாக 21 மருத்துவ பணியாளர்கள் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Recent Comments