ஒட்டிப் பிறந்த் இரட்டைக் குழந்தைகள் பிரித்தெடுப்பு..!!
சீனாவின் குவாங்க்சி மாகாணத்தில் உள்ள குய்பிங் வைத்தியசாலையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி யுவே ஜூக்சிங் என்ற பெண்ணுக்கு பிரசவம் நடந்தது.
இந்த பிரசவத்தில் அவருக்கு அழகான 2 பெண் குழந்தைகள் பிறந்தன. ஒன்றன்பின் ஒன்றாக பிறக்காமல் இரு குழந்தைகளும் ஒட்டிப் பிறந்ததால் அவை எத்தனை நாள் உயிருடன் இருக்குமோ என்ற கவலை யுவே ஜூக்சிங்கின் மனதை வாட்டியது.
இரு குழந்தைகளையும் சத்திரசிகிச்சை மூலம் பிரித்தெடுக்கலாம். ஆனால், அதற்கு நிறைய செலவாகும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக தெரிந்தவர்களின் மூலம் இணையத்தளங்களில் குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டு நிதியுதவி செய்யுமாறு யுவே ஜூக்சிங் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இரண்டு இலட்சம் யுவான் நிதி குவிந்தது. சத்திரச்சிகிச்சையை இலவசமாக செய்ய குவாங்க்சி வைத்திய பல்கலைக்கழக வைத்தியசாலையும் முன்வந்தது.
இதனையடுத்து, ஈரலின் மூலம் ஒட்டிப் பிறந்த அந்த குழந்தைகளை பிரித்தெடுக்க கடந்த 8ஆம் திகதி சத்திரச்சிகிச்சை நடைபெற்றது.
20 வைத்தியர்களின் உழைப்பில் சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்த சத்திர சிகிச்சையில் இரு குழந்தைகளும் வெற்றிகரமாக தனித்தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டன.
சத்திரசிகிச்சைக்கு பிந்தைய 3 வார சிகிச்சைக்கு பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமைதாயுடன் சேய்களும் நலமாக வீட்டை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating