தமிழ் மொழிக்கு முன்னால் சிங்களவர்களும், சிங்கள மொழிக்கு முன்னால் தமிழர்களும் ஏதுவும் அறியதவர்களாக மாறியுள்ளனர்‐டளஸ்..!
Read Time:1 Minute, 36 Second
தமிழ் மொழிக்கு முன்னால் சிங்களவர்களும், சிங்கள மொழிக்கு முன்னால் தமிழர்களும் ஏதுவும் அறியதவர்களாக மாறியுள்ளனர் என இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் மன்றங்களில் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் சிங்கள மொழியை கற்று பௌத்த மதத்தையும் சிங்கள கலாசாரத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் சிங்களவர்கள் தமிழ் மொழியை கற்று, தமிழ் கலாசாரத்தையும் இந்து, கிறிஸ்தவ தரமங்களையும் கற்றிந்துக்கொள்ள வேண்டும். தற்போது போர் குற்றங்களை பற்றி பேசுகின்றனர்.அரை நூற்றாண்டு காலம் நாட்டை ஆட்சி செய்து, தாய் நாட்டில் குரோதம் என்ற வைரசை பரப்பிய ஆட்சியாளர்களே உண்மையான போர் குற்றவாளிகள். இவர்கள் மொழிகளை கற்றுக்கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருந்தால், மூன்று தசாப்தங்களால் நாட்டில் இரத்தம் தோய்ந்த போர் ஏற்பட்டிருக்காது எனவும் அமைச்சர் அழகபெரும கூறியுள்ளார்.
Average Rating