பாலுறவில் ஈடுபட முன்பு சிறுநீர் கழிக்க வேண்டும்! ஏன் தெரியுமா..? (அவ்வப்போது கிளாமர்)
பாலுறவுப் புணர்ச்சி கொள்வதில் நீங்கள் போதிய திறன் (அனுபவம்) கொண்டவர் இல்லை யென்றாலும் அல்லது நிபுணத்துவம் படைத்தவராக இருப்பினும், உங்களது துணையுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும்போது, சில நேரங்களில் ஒருவிதமான சங்கடங்கள் ஏற்படக்கூடும். அதுபோன்ற சங்கடங்களில் இருந்து மீண்டு, தொந்தரவில்லா முழு பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள் .
பாலுறவுப் புணர்ச்சியின் போது உங்களை அறியாமலேயே ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொள்ள நேரிடலாம்.
அதாவது தலையுடன் தலை முட்டிக் கொள்ளும், முடியைப் பிடித்து இழுக்க நேரிடும். அல்லது ஒருவரின் கை எதிர் பாலினத்தவரின் கண்களில் பட்டு விடலாம். என்றாலும், ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்து மேற்கொள்ளும் உறவை அதுபோன்றவை கட்டுப்படுத்தி விடாமல் பார்த்துக் கொண்டால், முழு அளவிலான உறவை அனுபவிக்கலாம்.
கணவன், மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் சிறுநீர் கழிக்காமல் இருந்தால் முழு மகிழ்ச்சி கிடைக்காது. சிறுநீர்ப்பை காலியாக இருக்குமாறு பார்த்துக் கொள்தல் வேண்டும்.