ஒரே வகுப்பைச் சேர்ந்த 4 மாணவிகள் தற்கொலை… இந்த கொடுமைக்கு காரணம் யார்?..!!
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே பள்ளி மாணவியர் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆசிரியைகள் நான்கு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
அரக்கோணத்தை அடுத்த ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 11ம் வகுப்பு பயின்று வந்த தீபா, சங்கரி, மனிஷா, ரேவதி உள்ளிட்ட மாணவிகள் ஆறு பேர் பருவத் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளனர். இதனால் அவர்களை அழைத்து தலைமை ஆசிரியர் ரமாபாய் கண்டித்ததுடன், வசைபாடியதாக கூறப்படுகிறது.
மேலும் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறும் தலைமை ஆசிரியை ரமா பாய் தெரிவித்துள்ளார். ஆனால், தலைமை ஆசிரியர் கூறியது போல் மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு செல்லவில்லை.
இதையடுத்து, வெள்ளியன்று பள்ளிக்கு வந்த மாணவிகள் ஆறு பேரையும் வகுப்புக்கு வெளியே ஆசிரியர்கள் நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால், அவமானப்படுத்துவிட்டதாக கருதிய மாணவிகள் ஆறு பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து பள்ளியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாழடைந்த விவசாயக்கிணற்றை நோக்கிச் சென்றுள்ளனர். அங்கு சென்றவுடன் மாணவி மனிஷா முதலில் கிணற்றுக்குள் குதித்துள்ளார். பின்னர் மாணவிகள் தீபா, சங்கரி, ரேவதி ஆகியோரும் அடுத்தடுத்து குதித்துள்ளனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மேலும் இரு மாணவிகள் தற்கொலை முடிவுக்கு பயந்து, அங்கிருந்து ஓடிச் சென்று கிராமத்துப் மக்களிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளனர். இதனையடுத்து, மாணவிகள் குதித்த கிணற்றுக்கு வந்த தீயணைப்பு துறையினர் மாணவிகள் நான்கு பேரின் சடலங்களை மீட்டனர்.
Average Rating