திருமலை கிளைமோர்த் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் பலி
Read Time:57 Second
திருகோணமலை மாவட்டம் சேருநுவர லிங்கபுரம் 3 ஆம் வாய்க்கால் இடது கரையில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் நடந்தது.
வீதி சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரே கிளைமோர்த் தாக்குதலுக்கு இலக்காகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியை சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியதாக திருமலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating