செம்மண்ணோடையில் இனந்தெரியாதோரால் வீட்டுக்கு தீ வைப்பு…!!
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் செம்மண்ணோடை எம்.பி.சி.எஸ். வீதியில் புதிதாக கட்டப்பட்டு பூரணப்படுத்தப்படாத வீடு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.
இன்று அதிகாலை 02.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
செம்மண்ணோடையைச் சேர்ந்த எம்.ஏ.அப்துர்றஹ்மான் என்பவர் புதிதாக கட்டிய வீடே இவ்வாறு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது.
பொது மக்களினதும் மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைப்பு பிரிவினரதும் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating