கேரள மாணவி கொடூர கொலை: குற்றவாளிகளை படம் வரைந்து தேடும் போலீசார்..!!
கேரள மாநிலம் பெரும்பாவூரில் சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 38 காயங்கள் இருந்தது. வீட்டில் ஷிஜா தனியாக இருந்தபோது மர்மநபர்கள் இந்த கொலையை செய்து உள்ளனர்.
ஷிஜா கொலை நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி பெரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயர் போலீஸ் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கில் துப்புதுலக்கப்பட்டு வருகிறது.
இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் காரணமாக 8 பேரை போலீசார் தங்கள் பிடிக்குள் கொண்டு வந்து கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். அவர்களை கொலை நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றும் அவர்களது கை ரேகைகளை பதிவு செய்தும் விசாரணை நடத்தப்பட்டது.
ஆனால் ஷிஜாவின் வீட்டில் இருந்த கைரேகைகளுடன் இவர்களின் கைரேகைகள் ஒத்துபோகவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து 8 பேரில் 5 பேரை போலீசார் விடுவித்தனர்.
கொலையுண்ட ஷிஜாவின் சகோதரி ராஜேஸ்வரி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக உறவினர் ஒருவர் அடிக்கடி வந்து சென்று உள்ளார். அவர் தற்போது போலீஸ் பிடியில் உள்ளார். மேலும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர், வெளி மாநில தொழிலாளி ஆகிய 3 பேரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலை வழக்கு பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்களை படம் வரைந்து விசாரணை நடைபெறுகிறது. அந்த படத்தை பகிரங்கமாக தற்போது வெளியிட முடியாது. விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள் என்றார்.
மாணவி ஷிஜாவின் தாய் ராஜேஸ்வரி மகள் இறந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால் பெரும்பாவூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவரது உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் ஆஸ்பத்திரிக்கு சென்று ராஜேஸ்வரிக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
Average Rating