8 தீவிரவாதிகளை கொன்று வீரமரணம் அடைந்த கோவை ராணுவ வீரருக்கு மரியாதை!!
கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகில் உள்ள நாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெங்கிட பெருமாள், மங்குத்தாய் ஆகியோரின் 4–வது மகன் கண்ணாளன் கென்னடி.
இவர் 1984 ஆண்டு நெ.25 மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவத்தில் சேர்ந்து திருவனந்தபுரம் மற்றும் இலங்கை அமைத்திப்படையில் பணியாற்றினார். தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் பகுதியில் எல்லை பாதுகாப்பு படைப்பிரிவில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 1993ஆம் ஆண்டு 10க்கும் மேற்பட்ட திவிரவாத கும்பல் வெடிமருந்துகளுடன் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற தகவல் அறிந்து அவர்களை சுட்டுக்கொல்ல புறப்பட்டனர்.
அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்தி அதில் 8 தீவிரவாதிகளை கண்ணாளன் கென்னடி சுட்டு வீழ்த்தினார். இதில் மற்ற தீவிரவாதிகளால் சுடப்பட்டு தலையில் குண்டு காயம் ஏற்பட்டு அங்கேயே வீரமரணம் அடைந்தார். உடனிருந்த மற்ற பாதுகாப்பு படையினரால் 7 தீவிரவாதிகள் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். 7 தீவிரவாதிகளை பிடிக்க உதவியாக இருந்ததுடன் 8 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்று வீரமரணம் அடைந்த கண்ணாளன் கென்னடிக்கு அவரது வீரச்செயல்களைப் பாரட்டி இந்திய ராணுவத்தின் உயரிய விருதான கீர்த்திசக்ரா விருதை 1994ல் அப்போதைய ஜனாதிபதியால் கென்னடியின் தாயாரிடம் வழங்கிப்பட்டது. கென்னடியின் நினைவாக நாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் மணிமண்டபம் கட்டப்பட்டு அதில் அவரது படங்கள், உடைகள், கேடயங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கபட்டுள்ளது. இவற்றை அப்பகுதி மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.
கடந்த 22 வருடமாக குன்னூர் வெலிங்டன் மற்றும் ரேஸ்கோர்ஸ் 110 படைப்பிரிவுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் 50 பேர் நாயக்கன்பாளையத்தில் உள்ள கண்ணாளன் கென்னடியின் நினைவு தினத்தன்று அவரது நினைவிடத்திற்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த வருடம் வந்த எம்.ஆர்.எல் வெலிங்டன் ராணுவமுகாம் கேப்டன் ராபீன், முன்னால் கர்னல்.மார்ட்டின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்ணாளன் கென்னடியின் நினைவு இடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கென்னடியின் வீரச் செயலை போற்றும் விதமாக கீர்த்திச் சக்ரா நாயக் கண்ணாளன் கென்னடியின் வீர வரலாறு எனும் புத்தகத்தை கென்னடியின் தாயார் மங்குத்தாய் வெளியிட ராணுவ கேப்டன் ராபீன் பெற்றுக் கொண்டார். மேலும் நாயக்கன்பாளையம் கிராமத்தில் அவரது வீரத்தை போற்றும் விதமாக ஒரு சாலைக்கு அவரது பெயரை சூட்டி பெருமைப்படுத்தியுள்ளனர் அக்கிராம மக்கள். இதற்கான ஏற்பாடுகளை கென்னடியின் குடும்பத்தினர், கென்னடி கேஸ் ஏஜென்சிஸ் நிறுவனத்தினர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating