பாளையில் கள்ளக்காதலனுடன் ஓடிய இளம்பெண் வெட்டிக்கொலை: கணவர் வெறிச்செயல்!!
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மணக்கரை கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசு (வயது32). இவர் சொந்தமாக மினி லாரி வைத்து ஓட்டி வந்தார். இவரது மனைவி பொன் ஈஸ்வரி (27). இவர்களுக்கு முத்து சரளா (9), முத்துமாரி (7), சீதாலட்சுமி (2) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
பொன் ஈஸ்வரி பாளை வ.உ.சி. மைதானம் அருகே உள்ள ஒரு அரசு அலுவலகத்தில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதனால் பாளை இந்திரா நகரில் உள்ள தாய் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார்.
அப்போது இந்திரா நகரில் உள்ள பாலமுருகன் என்ற வாலிபருடன், பொன் ஈஸ்வரிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. பாலமுருகன் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் அன்பரசுக்கு தெரியவந்தது. இதனால் அவர் மனைவியை கண்டித்து, தகராறு செய்தார். இதனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பொன் ஈஸ்வரி தனது 3 குழந்தைகளையும் அழைத்து கொண்டு பாளை இந்திரா நகரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
அங்கு கள்ளக்காதல் ஜோடியினர் தங்கு தடையின்றி சந்தித்து வந்தனர். கடந்த 4–ந்தேதி பொன் ஈஸ்வரி, தனது கள்ளக்காதலனுடன் ஊரை விட்டு வெளியூருக்கு ஓடிவிட்டார்.
இதுகுறித்து பொன் ஈஸ்வரியின் தந்தை இசக்கி பாளை ஐகிரவுண்டு போலீசில் மகளை காணவில்லை என்று புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் ஜோடியை தேடினர். இந்த நிலையில் கடந்த 15–ந்தேதி பொன் ஈஸ்வரி தன்னை யாரும் கடத்தவில்லை என்று போலீசில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பொன் ஈஸ்வரியின் கணவர் அன்பரசுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இன்று காலை அவர் தனது மினி லாரியில் அரிவாளை எடுத்துக்கொண்டு, பாளையில் உள்ள மனைவி வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டில் இருந்த குழந்தைகளை வெளியே விளையாட போக சொல்லி விட்டு, மனைவி பொன் ஈஸ்வரியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானாள்.
அலறல் சத்தம் கேட்டு பொன் ஈஸ்வரியின் தாயார் முருகம்மாள் மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர். அங்கு பொன் ஈஸ்வரி பிணமாக கிடப்பதை பார்த்து கதறி துடித்தனர். ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் வெளியேறிய அன்பரசு, நேராக ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாளை போலீஸ் உதவி கமிஷனர் மாதவன், இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொன் ஈஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சரண் அடைந்த அன்பரசை கைது செய்தனர்.
மனைவியை கணவனே வெட்டிக்கொன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating