தாய்லாந்தில் சுற்றிவளைப்பு 45பேர் கைது!! போலி கடனட்டைகளுடன் கனேடியப் பிரஜையான தமிழரொருவர் உட்பட மூன்று தமிழர்கள் கைது! பிரபா என்னும் புலிப் பிரமுகர் தப்பியோட்டம்!!
புலிப் பிரமுகர்களினால் இந்தோனேசியா, கனடா போன்ற நாடுகளுக்கு தமது கப்பல்கள் மூலம் தமிழ்அகதிகள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து தாய்லாந்தில் வைத்து மேற்படி கப்பல்களில் ஆட்களை ஏற்றியனுப்பிய சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். தாய்லாந்து பெண்மணியைத் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரபா என்னும் புலிப் பிரமுகரே தாய்லாந்தின் பாங்கோக்கிலுள்ள குரும்தோன்புறி என்னுமிடத்திலிருந்து லாகோஸ் எனுமிடத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஞாயிறன்று மாலை தாய்லாந்து சீ.எஸ்.டீ பொலீசார் குலாம்தே என்னுமிடத்தில் அமைந்துள்ள குலாம்தே ஹோட்டலைச் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியபோது ஒரு கனேடியத் தமிழர் உட்பட மூன்று இலங்கைத் தமிழர்களைக் கைது செய்துள்ளதுடன், அவர்கள் வசமிருந்த 104 (கடனட்டைகள்) கிறடிட் கார்ட், கிரடிட்காட் ரீடர் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர். இதன்போது கனடாப் பிரiஐயான 24வயதான சிவப்பிரியன் சிவப்பிரகாசம், 22வயதான அஜந்தன் பாலேந்திரன், 28வயதான வெங்கடேஸ்வரன் மகேஸ்வரன் ஆகியோரே கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்றுகாலை தாய்லாந்து பொலீஸார் சுவீசான் என்னுமிடத்திலுள்ள இந்தமறா என்ற ஊரில் நடத்திய சுற்றிவளைப்பின் போது 45இலங்கைத் தமிழர்கள் விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றுகாலை கைது செய்யப்பட்ட குறித்த 45பேரில் 24பேர் 01வயது முதல் 13வயதுக்கிடைப்பட்ட சிறுவர்கள் எனவும் தெரிய வருகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்ட 45பேரும் விசா இல்லாதோருக்காக தாய்லாந்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புமுகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Thanks.. WWW.ATHIRADY.COM
Average Rating
2 thoughts on “தாய்லாந்தில் சுற்றிவளைப்பு 45பேர் கைது!! போலி கடனட்டைகளுடன் கனேடியப் பிரஜையான தமிழரொருவர் உட்பட மூன்று தமிழர்கள் கைது! பிரபா என்னும் புலிப் பிரமுகர் தப்பியோட்டம்!!”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Just now I called Piraba and spoke to him over 30mts and the information published in Nitharsanam is wrong. Could you please publish the original source of this information, As a media everyone wanted a braking news but we shouldn’t be attacking anyone in a personnel cause. Please verify this information or remove this article from this site. There are lots of Tamils helping each other during the difficult time and we shouldn’t be discouraging by this gossip and please encourage our brothers and sisters.
கடந்த முப்பது வருடங்களாக நடந்து முடிந்த விடயங்கள் நாங்கள் எல்லாம் மனிதமே இல்லாத வெறிபிடித்த பிச்சைக்கார சிந்தனையில் ஊறிய காசுப் பேய்கள்
என்பதை அம்பலப்படுத்திவிட்டன
தூரநோக்கில்லாத அடுத்த வேளை வாழ்வதுக்காக எவனையாவது ஏமாற்றி பிழைக்க எண்ணும் குண்டுசட்டிக்குள் குதிரைஓட்டும் கோமாளிகள் நாங்கள்.
எம்மை போலவே மற்றவர்களும் குருடர்களாக வாழ்வதாக எண்ணி எங்களையே நாங்கள் ஏமாற்றி கொண்டு இருக்கிறோம்.
இவ்வளவும் நடந்தும் நாங்கள் திருந்தவில்லை என்றால் எப்பதான் நாங்கள் திருந்துவதோ?