உங்கள் கண்களை அழகாக காட்ட வேண்டுமா?..!!
கண்ணுக்கு மட்டும்தான் உள்ளத்தையும் சேர்த்துப் பிரதிபலிக்கும் குணம் இருக்கு. அதனால் கண் எப்பவுமே ஸ்பெஷல்தான். இதை இன்னும் ஸ்பெஷலாக்க, வீட்டிலேயே என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தரமான ஐபுரோ பென்சிலை வாங்கி, ஒரு டப்பாவில் கொஞ்சம் விளக்கெண்ணைய் ஊற்றி, அதற்குள் ஐபுரோ பென்சிலின் நுனி மூழ்கியிருக்குமாறு வைக்க வேண்டும். தினமும் இரவு, புருவ முடி வளர்ந்துள்ள திசையிலேயே, இந்த பென்சிலைக் கொண்டு அழுத்தமாக வரைந்து, மறுநாள் காலையில் கழுவிவிட வேண்டும். ஐபுரோ பென்சிலில் உள்ள லனொலின் மற்றும் விளக்கெண்ணெய் இவை இரண்டும் இணைந்து, மெல்லிய புருவங்களை அடர்த்தியாக்கவும், உதிர்ந்த புருவ முடியை திரும்ப வளரவைக்கவும் உதவும்.
குறிப்பு: தினமும் புருவத்துக்கு ஐபுரோ பென்சில் போடும்போது, முடிகளில் மட்டும் இல்லாமல், சருமத்திலும் மை பட்டு, சருமத் துவாரங்கள் அடைத்துக்கொள்ளும். இதற்கு காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கும் டிரான்ஸ்பரன்ட் மஸ்காராவை ஐபுரோவின் மேல் போட்டால், முடியைத் தவிர சருமத்தில் பட்டுள்ள மையை நீக்கிவிடும்.
கண் இமைகளின் மேல்தோலில் கருமையும், சுருக்கமும் ஏற்படுவதைத் தடுக்க ஐ லைனர், மஸ்காரா, ஐ ஷேடோ போன்றவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஐ மேக்கப் போட வேண்டிய கட்டாயம் இருந்தால், இரவு அதை முழுமையா அலசிவிட்டுத்தான் தூங்கச் செல்ல வேண்டும்.
கருவளையம் வந்தால், முதலில் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். மருத்துவர்கள் கண்களை இழுத்துப் பரிசோதிப்பது போல கண்ணாடி முன் நின்று பரிசோதிக்க வேண்டும். கருவளையத்தின் மேல் விரல் வைத்து இழுக்கும்போது, தோல் பகுதி வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைவு (குறிப்பாக இரும்புச்சத்து) காரணமாக ஏற்பட்ட கருவளையமாக இருக்கலாம். இதுவே கறுப்பாக இருந்தால், பிக்மென்ட் அல்லது மரபணுவினால் ஏற்பட்டுள்ள கருவளையமாக இருக்கக்கூடும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating