ஏமனில் சவுதி கூட்டுப்படை வான்வெளி தாக்குதல்: 12 பேர் பலி…!!
ஏமன் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு தருகிறது. அதே நேரத்தில், ஏமன் அதிபருக்கு ஆதரவாகவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் சவுதி கூட்டுப்படைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சண்டையிட்டு வருகின்றன. இந்த சண்டையில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லபட்டு விட்டனர்.
இந்நிலையில், சவூதி தலைமையிலான கூட்டுப்படை ஏமனில் மீண்டும் வான்வெளி தாக்குதல் நடத்தியது. ஹஜ்ஜா மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
சாலையில் சென்று கொண்டிருந்த காரை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதேபோல் ஹய்ரன் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள் மீதும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அப்பகுதி வாசிகள் தெரிவித்தனர்.
சமீப காலமாக அமெரிக்க ஆதரவு சவூதி படையினர் நடத்தும் விமான தாக்குதல்களில், பொதுமக்கள் பலியாவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Average Rating