ராசி இல்லாத நடிகை என்று என்னை ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்…!!
முதல் படம் தோல்வி அடைந்ததால் தன்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கியதாக சுருதிஹாசன் கூறியுள்ளார்.
நடிகை சுருதிஹாசன் இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:-
“பள்ளியில் படித்த காலங்களில் சுதந்திரமாக முடிவுகள் எடுத்தேன். வகுப்பில் நடக்கும் விஷயங்களை வீட்டில் தெரிவிப்பது இல்லை. வீட்டு பாடங்களை பற்றியும் சொல்ல மாட்டேன். குடும்பத்தினர் உதவிகள் இல்லாமல் நானே பாடங்களை படித்தேன். எனது தேவைகளை நானே கவனித்துக்கொண்டேன். அந்த பழக்கம் இப்போது சினிமாவில் எனக்கு உதவுகிறது.
திரையுலகில் சுதந்திரமாக முடிவுகள் எடுக்கும் தைரியத்தை அது கொடுத்து இருக்கிறது. சிறு வயதில் கற்பனையாக கதைகள் சொல்வேன். அந்த பழக்கமும் உதவுகிறது. இதனால் சினிமாவில் முன்னேறிக்கொண்டு இருக்கிறேன். தமிழ், தெலுங்கில் அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறேன். பள்ளியில் படித்தபோதே சினிமா ஆர்வம் இருந்தது. இசையில் ஈடுபட விரும்பினேன். நடிகையாகும் எண்ணமும் இருந்தது.
படித்து முடித்ததும் ‘லக்’ என்ற இந்தி படத்தில் அறிமுகமானேன். அந்த படம் சரியாக போகவில்லை. உடனே என்னை ராசி இல்லாத நடிகை என்று விமர்சித்தனர். ஒதுக்கவும் செய்தார்கள். அதுபற்றி கவலைப்படாமல் தொடர்ந்து நடித்தேன். இன்று முன்னணி கதாநாயகி இடத்துக்கு வந்து இருக்கிறேன். வருடத்துக்கு 340 நாட்கள் நடித்துக்கொண்டே இருக்கிறேன்.
சினிமாவில் கவர்ச்சி அவசியம். ஆனாலும் அந்த கவர்ச்சியை ஒரு ஆயுதம் போல் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ரசிகர்கள் எதிர்பார்ப்பு முக்கியம். அவர்கள் எனது நடிப்பு பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறேன். அவர்கள் எதிர்பார்ப்புப்படியே கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிக்கிறேன். சூர்யாவுடன் நடித்த ‘சி.3’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தற்போது எனது தந்தையுடன் இணைந்து ‘சபாஷ்நாயுடு’ என்ற படத்தில் நடித்து வருகிறேன்.”
இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating