அரச பேருந்தால் மக்களுக்கு அவல நிலை…!!
வவுனியா – செட்டிக்குளம், மெனிக்பாம் பகுதிகளுக்கு பயணிக்கும் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபையின் சில பேருந்துகளினால் கடும் சிரமத்திற்கு உள்ளாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலைக்குச் சொந்தமான செட்டிக்குளம் சென்று வரும் சில பேருந்துகள் மிகவும் சேதமான நிலையில் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு பொருத்தமற்றதாக காணப்படுகின்றது.
ஆசனங்கள் உடைந்த நிலையில் காணப்படுவதால் ஆசனங்களில் அமரும் மற்றும் நின்று பயணிக்கும் பயணிகளின் கால்களை கிழித்து காயப்படுத்துவதுடன், அவர்களின் உடைகளையும் சேதப்படுத்துகின்றது. இனால் மாணவர்கள், அரச மற்றும் அரச சார்ப்பற்ற நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Average Rating