இத்தாலியிருந்து வந்த தமிழர் ஒருவருக்கு நேர்ந்த அவலம்…!!
இத்தாலியிலிருந்து இலங்கை வந்த நபர் ஒருவரை ஆயுதமுனையில் கடத்திய சம்பவமொன்று சிலாபம், வட்டக்காளியில் இடம்பெற்றுள்ளது.
நோய்வாய்ப்பட்டிருக்கும் தனது தாயை பார்ப்பதற்காக இத்தாலியில் நீண்ட காலமாக தொழில்புரியும் இலங்கையரான சுரேஷ் என்பவர் கடந்த 23ம் திகதி இலங்கை வந்துள்ளார்.
ஆயுதமுனையில் நள்ளிரவு கடத்திச் சென்ற மூவர் 7000 யூரோவை வழங்குமாறும் 7000 யூரோவை தருவதாக ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டு தருமாறும் அச்சுறுத்தியதுடன் மிக மோசமாக தாக்கியுள்ளனர்.
துப்பாக்கியை வாய்க்குள் திணித்து அச்சுறுத்தி கடிதத்தில் கையெழுத்து இட்டு எடுத்துக் கொண்டு மூவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
கடந்த 3ம் திகதி நள்ளிரவு சுமார் 10.30 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த நபர்கள் இவரை ஆயுத முனையில் கடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக சுரேஷ் கூறுகையில்
1992ம் ஆண்டு இத்தாலிக்குச் சென்ற நான் நீண்ட நாட்கள் இலங்கைக்கு வரவில்லை.மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் இத்தாலியில் வசிக்கும் நான் தாயின் உடல் நிலை தொடர்பாக அறிவதற்காக வந்தேன்.
அன்று இரவு 10.30 மணியளவில் மூன்று பேர் வீட்டுக்குள் நுழைந்து என் தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்தி என்னை இழுத்துச் சென்றார்கள். எங்கே போகிறோம் எனக் கேட்ட போது நீர்கொழும்பு பொலிஸுக்கு என்று கூறினார்கள்.
வந்தவர்களில் ஒருவர் இத்தாலியில் இருக்கும் போது மிகவும் பரீட்சயமானவர். வாகனத்தினுள் என்னை அழைத்துச் சென்றவர்கள்.சிலாபம் நொயிஸ் வீதியில் வாகனத்தை நிறுத்தி 7000 யூரோவை கபில என்பவருக்கு தருவதாக எழுதித்தந்தால் உயிருடன் விடுவோம் இல்லையேல் சுட்டுக் கொன்று விடுவோம் என அச்சுறுத்தினர்.
முடியாது என்றேன். சுட்டுக் கொல்வதாகக் கூறி வாய்க்குள் துப்பாக்கியைத் திணித்து என்னை மிக மோசமாக தாக்கினார்கள்.
எனது சட்டத்தரணியிடம் பேச வேண்டும் என்று கூறினேன் பேச அனுமதித்தார்கள். முதலில் கடிதத்தை எழுதிக் கொடு பின்னர் பார்த்துக் கொள்வோம் என சட்டத்தரணி கூறினார்.
இதன்படி கையெழுத்திட்டுக் கொடு த்ததும் என்னை மீண்டும் வீட்டில் விட்டு விட்டுச் சென்றனர். அச்சம் காரணமாகவும் வருத்தம் காரணமாகவும் தூங்கிவிட்டேன்.
காலையில் 119 இலக்கத்துக்கு அழைத்து நடந்த அனைத்தையும் கூறினேன். சிலாபம் பொலிஸார் வந்து என்னிடம் வாக்குமூலம் பெற்று ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் என சுரேஷ் தெரிவித்தார்.
இவரது வாக்குமூலத்தின் படி கபில என்ற சந்தேக நபர் 5ம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றைய இருவரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.
கபில என்ற நபருக்கும் சுரேஷுக்கும் இத்தாலியில் தொடர்புகள் இருந்துள்ளதாகவும் கபிலவின் நடவடிக்கைகளில் திருப்தியில்லாத காரணத்தினால் அவருடன் உள்ள தொடர்புகளை சுரேஷ் கைவிட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating