நித்யானந்தன்-ரஞ்சிதா மேட்டர் தப்பே இல்லை! -சோனா

sona-27எந்த நடிகையைப் பார்த்தாலும் உடனே நிருபர்கள் கேட்கும் ரெடிமேட் கேள்வி நித்யானந்தா- ரஞ்சிதா விவகாரம் குறித்துதான். தமிழே தெரியாத தமன்னாவாக இருந்தாலும் சரி, தமிழ் தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கும் த்ரிஷாவாக இருந்தாலும் சரி… முதல் கேள்வியாக ரஞ்சிதாவின் பலான மேட்டர் பற்றித்தான் கேட்பதென்று முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது. கவர்ச்சி நடிகை சோனாவிடமும் நேற்று அதே கேள்வியை வீசினர். சொந்தமாக படம் தயாரிக்கிறாராம் சோனா. இந்தப் படத்துக்காக சில நிருபர்களை அழைத்து ‘கவரேஜ்’ பண்ணச் சொல்லியிருக்கிறார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று, ‘ செக்ஸ் புகாருக்குள்ளான நித்யானந்தா சாமியார்-ரஞ்சிதா பற்றி உங்கள் கருத்து என்ன?’ இதற்கு பதிலளித்த சோனா, “அதில் என்ன தப்பு இருக்கு? இருவரும் விருப்பப்பட்டுத்தானே அப்படி நடந்து கொண்டார்கள். அது அவர்கள் விருப்பம். அதுபற்றி மேற்கொண்டு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை…” என்றார்.

“உங்களை திருமணம் செய்துகொள்வதற்கு நிறைய பேர் ஆசைப்படுவதாக முன்பு கூறியிருந்தீர்கள். உங்கள் கணவரை தேர்ந்தெடுத்து விட்டீர்களா?” என்று கேட்டதற்கு,

“இனிமேல் நான் ஆண்களை நம்ப மாட்டேன். எல்லோருமே காரியவாதிகள். நான் ஒளிவு மறைவு இல்லாதவள். திறந்த மனதுடன் பேசுபவள். என்னை எந்த ஆணும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். யாராவது என்னிடம் வந்து, ‘நீங்க அழகா இருக்கீங்க (?!)’ என்று வழிந்தால், நான் கண்டுகொள்வதில்லை. ஏறக்குறைய ஞானி ஆகிவிட்டேன்…” என்றார்.

சினிமாவிலும் நிஜத்திலும் இனி சேலை கட்டவே விரும்புகிறாராம் சோனா… பெரிய கலாச்சாரப் புரட்சிதான்!

sona-bday-13sona-19_001sona-23_001sona-22sona-6sona5_002sona5_001sona-5sona-1sona-_96_

Comments (1)

kalyani

March 11th, 2010 at 1:23    


emma Sona, naddil ponunna eppadi irukkanum endu vavasthai ilaya

Leave a reply

Name *

Mail *

Website